மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!
மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தில் மஞ்சள் காமாலை காரணமாக 2500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தினுள் கிட்டத்தட்ட 20 பேர் மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிகஹவதன தெரிவித்துள்ளார்.
மண் மற்றும் நீர் ஆகியவற்றில் அதிகளவில் தொழில் புரிபவர்களுக்கே இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நோய் காரணமாக இரைப்பை மற்றும் சிறுநீரகங்களே அதிகளவில் சேதமடைவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating