ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!!

Read Time:2 Minute, 2 Second

a1-5ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது

வீதியோரமாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மேற்ப்படி விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதி நித்திரை கொண்டமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக தொிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பனிக்கன்குளத்தை சேர்ந்த செல்லையா இராசரத்தினம் வயது 47 என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மை நாட்களாக சாரதிகளின் கவனக்குறைவால் (நித்திரை கொள்வதால்) விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் இதனால் உயிரிழப்புக்கள் உடமை இழப்புக்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!!
Next post அவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு…!!