செங்கோட்டை அருகே சேர்ந்து வாழ முடியாததால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி..!!

Read Time:4 Minute, 53 Second

201607301108371596_affair-Couple-swallowed-poison-near-sengottai_SECVPFசெங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாடப்பன் மகன் குருமூர்த்தி (வயது 25). கொத்தனார். இவருக்கு திருமணமாகவில்லை. குருமூர்த்தியுடன் அச்சன்புதூர் பண்ணைவீடு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலா (29). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

குருமூர்த்தியும், மணிகண்டனும் நண்பர்களாக பழகி வந்தனர். அதனால் குருமூர்த்தி அச்சன்புதூரில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது மணிகண்டனின் மனைவி கலாவிற்கும் குருமூர்த்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்தது. அவர் கலாவை கண்டித்தார். குருமூர்த்தியையும் இனி தனது வீட்டிற்கு வரவேண்டாம் என தடுத்துள்ளார். இதனால் தனிமையில் சந்திக்க முடியாமல் கள்ளக்காதல் ஜோடி தவித்தது.

இனி வீட்டில் இருந்தால் சந்திக்க முடியாது என நினைத்த குருமூர்த்தியும், கலாவும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளியூருக்கு ஓட்டம்பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தனது மனைவியை காணவில்லை என அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் குருமூர்த்தியுடன் வெளியூரில் தங்கி இருந்த கலாவை அச்சன்புதூருக்கு அழைத்து வந்தனர். இரண்டு குழந்தைகளும், கணவரும் உள்ள நிலையில் திருமணமாகாத வாலிபருடன் கள்ளத்தொடர்பு தேவைதானா? என கலாவிற்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன் பின்னரும் கலாவும், குருமூர்த்தியும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இனியும் சுதந்திரமாக சேர்ந்து வாழ முடியாது என நினைத்த அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று இரவு குருமூர்த்தியும், கலாவும் தேன்பொத்தை பகுதியில் உள்ள வண்டாளம் பொட்டல் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒரு தனியார் தோப்பிற்குள் சென்ற இருவரும் அங்கு வி‌ஷம் குடித்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் கண்டு உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் குருமூர்த்தி, கலா இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குரூமூர்த்தி இறந்து விட்டார். உயிருக்கு போராடிய கலாவிற்கு தென்காசி அரசு ஆஸ்பத்தியில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்துனியை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆட்டோ டிரைவரை கொலை செய்தேன்: அக்காள் கணவர் வாக்குமூலம்…!!
Next post புதுக்கோட்டை அருகே தந்தையை கொன்ற மகன்…!!