போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் கைது…!!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக பொலிஸ்போதைப் பொருள் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வசமிருந்து ஆறுகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வேறொரு நபருக்கு அதனை விற்பனை செய்வதற்கு அவர் முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் போதைப் பொருளில் ஒரு பகுதியை திருடி நீண்டகாலமாக அவர் இவ்வாறான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating