கணவனைக் கொன்ற மனைவி கைது…!!
அம்பாறை பிரதேசத்தில் தன் கணவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் தம்பிலுவில் பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பச் சண்டையின் போது மனைவியின் தாக்குதல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கு 42 வயது என்றும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 46 வயதான அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண் இன்று அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating