விமான நிலையத்தின் தொழிற்சங்க தலைவர் கைது…!!
விமான நிலையத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவரை வரக்காபொலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்களை பயன்படுத்தி கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை சம்பந்தமான அலங்கரிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று வரக்காபொலை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை அனுமதி பெறாமல் வழங்கியதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating