ஆந்திராவில் பாதிரியார் கடத்தி கழுத்து அறுத்து கொலை: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்..!!
ஆந்திரா, தெலுங்கானா, சத்திஷ்கர் ஆகிய மாநில எல்லை காட்டுப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில கிழக்கு கோதாவரி மாவட்டம் லச்சிகூடம் எல்லை பகுதி கிராமத்துக்குள் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்தனர். அங்கு வசிக்கும் பாதிரியார் மாரய்யா மற்றும் ராஜு ஆகிய 2 பேரை கடத்தி சென்றனர்.
போலீசுக்கு உளவு சொன்னதாக கூறி பாதிரியார் மாரய்யாவை சரமாரியாக தாக்கி கத்தியால் உடல் முழுவதும் வெட்டினர். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.
இக்கொலையை ராஜூ கண் முன்பு நடத்திய மாவோயிஸ்டுகள், இதுபற்றி கிராமத்துக்கு சென்று கூறுமாறும், போலீசுக்கு உளவு கூறினால் இதுபோல் கொலை செய்வோம் என்று தெரிவிக்குமாறும் கூறி அவரை விடுவித்தனர். இதுபற்றி ராஜு கிராமத்தினருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.
போலீசார் காட்டுப் பகுதிக்கு சென்று பாதிரியார் உடலை மீட்டனர். அவரது உடலில் மாவோயிஸ்டுகள் ஒரு கடிதத்தை வைத்து இருந்தனர். அதில், எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating