ஓந்தாச்சிமடம் வாவியில் சிறுவனின் சடலம் மீட்பு..!!
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமானது சிவஞானம் டினோசன் (12) எனும் சிறுவனுடையது என உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
சிறுவன் அண்மைக்காலமாக புத்தி சுயாதீனம் அற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.
இவர் இறப்பதற்கு முன்தினம் இரவு காணமல் போயிருந்தார், மறுநாள் மாலை ஒந்தாச்சிமடம் வாவியில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளதாக கிராம மக்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.
அதன் பின்னரே அது எனது மகனின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதனை இனங்கண்டு கொண்டேன் என உயிரிழந்த சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Average Rating