சிரியாவில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது: 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி..!!
Read Time:1 Minute, 9 Second
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட அலெப்போ நகரில் ரஷ்ய ராணுவத்தினர் உதவிப் பொருட்களை விநியோகித்து ஹெலிகாப்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த எம்.ஐ-8 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர் அது.
அப்போது, ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் தரையில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் சுக்கு நூறாக சிதறி விழுந்தது. ரஷ்யா பாதுகாப்பு துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரில் 2 அதிகாரிகள், 3 ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்ததை ரஷ்யாவின் கிரெம்லின் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
Average Rating