மன்னார் புதைகுழி தோண்டப்பட்டது..!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழிக்கு சற்று தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட கிணறு இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.
இந்த மர்மக்கிணறு தொடர்பான வழக்கு விசாரனை இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணிகள் மன்றிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் அனைவரும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததோடு மன்னார் மாவட்ட விசேட சட்டவைத்திய அதிகாரி மருத்துவர் ;டபிள்யு.ஆர்.எஸ்.ராஜபக்சவும் சமூகமளித்திருந்தார்.
கிணறு தோண்டும் பணிகளுக்கு முன்னதாக, அதனையண்டிய பிரதேசங்களில் வெடிபொருட்கள் எவையாவது காணப்படுகின்றதா? என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
அகழ்வின் போது இரண்டு சிறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில், மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் கிணறு ஒன்றை தோண்டும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டு 87 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன.அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மற்றுமொரு கிணறு ஒன்றே தற்போது தோண்டப்படுகின்றது.
Average Rating