களுதாவளையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு முற்றாக சேதம்…!!
Read Time:1 Minute, 7 Second
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் நேற்று மாலை 3.45 மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை களுதாவளை வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் குறித்து வீடு எரிந்து முற்றாக சாம்பராகியுள்ளது.
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முற்கொண்டதுடன் தீயையும் கட்டுப்படுத்த உதவினர்.
வீட்டிலுள்ள முக்கிய ஆவணங் கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளி ரூட்டி போன்றன எரிந்து முற்றாக நாச மடைந்துளள்ன.
Average Rating