பாரிய மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி…!!
பதுளை – எல்ல பிரதேசத்தில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை வேலையில் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 58 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது கணவர் கிணற்றடிக்கு சென்ற வேளையில் பாரிய சத்தம் கேட்டதாகவும், உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு சென்ற போது பாரிய கருப்பந்தேயிலை மரமொன்று கணவர் மீது விழுந்து கிடப்பதைக் கண்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating