பச்சிளம் குழந்தையை கடந்த முயன்ற பெண்: காப்பாற்றிய 9 வயது சிறுவன்…!!

Read Time:2 Minute, 36 Second

07-1441628318-baby-6000ஜேர்மனியில் புதிதாக பிறந்த குழந்தையை பெண்மணி ஒருவர் கடத்தி செல்ல முயன்ற போது, அக்குழந்தையின் 9 வயது சகோதரன் காப்பாற்றியுள்ளான்.

Hamburg நகரில் உள்ள Mariahilf மருத்துவமனையில் பெண்மணி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அப்போது, பிறந்த குழந்தையுடன் பிரசவ அறையில் தாய் தூங்கிகொண்டிருக்கையில், திடீரென அறைக்குள் நுழைந்த 31 வயது பெண், அக்குழந்தையை தூக்கிகொண்டு வெளியில் சென்றுள்ளார்.

இதனைப்பார்த்த, இக்குழந்தையின் 9 வயது சகோதரன், அப்பெண்மணியை பின்தொடர்ந்து சென்றுள்ளான், மருத்துவமனையை விட்டு அப்பெண் வெளியேற முயற்சிக்கையில், இச்சிறுவன் அருகில் சென்று குழந்தையை வாங்கியுள்ளான்.

பின்னர், குழந்தையைடன் பிரசவ அறை நோக்கி சென்ற சிறுவனை, செவிலியர்கள் பார்த்து என்ன நடந்து என கேட்டுள்ளனர், இச்சிறுவனும் நடந்தவற்றை விளக்கி கூறியுள்ளான். அதற்குள் அப்பெண் மருத்துவமனையை விட்டு செல்லவில்லை என்பதை அறிந்த செவிலியர்கள் பின்தொடர்ந்து சென்று அப்பெண்ணை பிடித்துள்ளனர்.

அப்பெண் பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவர் போன்று இருந்ததால், மனநல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் இப்பெண் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார் என்பது தெரியவரவில்லை. ஆனால் இப்பெண் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக பொலிசில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கரவண்டி விபத்து – மூவர் வைத்தியசாலையில்…!!
Next post தோண்டப்பட்ட மர்மக் கிணற்றில் தொடரும் மர்மங்கள்…!!