தோண்டப்பட்ட மர்மக் கிணற்றில் தொடரும் மர்மங்கள்…!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று(2) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது.
இன்று கலை 8 மணிமுதல் காலை 11 மணிவரை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.
மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்ற அகழ்வுப்பணியின் போது இது வரை குறித்த கிணறு 100 சென்றி மீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியின் போது நீர் வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்றைய அகழ்வின் போது தடையப்பொருளாக சந்தேகிக்கும் வகையில் ‘பல்’ ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மேலும் முள்ளுக்கம்பி துண்டுகள்,கற்கள் என்பனவும் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்டுள்ள தடையப்பொருட்கள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது வரை 10 அடுக்குகளாக குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மாவட்ட சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணியில் அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் காணாமல் போன உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் கிணறு தோண்டும் இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
மீண்டும் இன்று மாலை 2 மணிக்கு அகழ்வு பணிகள் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating