குளத்திலிருந்து விமான படை சிப்பாய் சடலமாக மீட்பு…!!
பாணந்துறை-பொல்கொட குளம் ஒன்றில் இருந்து விமான படையை சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிப்பாய் இரத்மலானை விமான படை முகாமை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த விமான படை சிப்பாய் 38 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியின் அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டதாகபொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating