ஒருதொகை சிகரெட்டுக்களுடன் பெண் கைது…!!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் இருந்து வந்த பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக, விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக குறிப்பிட்டுள்ளார்.
இவற்றின் பெருமதி 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating