7 வருடங்களாக குழந்தை பெற்றுத் தராத மனைவியின் கையை வெட்டி கோரமாக்கிய கணவன்…!!

Read Time:2 Minute, 27 Second

201608031604273325_women-attacked-in-Kenya-for-not-delivering-child-for-7-years_SECVPFகென்யாவின் மசி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் நிகில, ஜாக்குலின் மெவண்டே தம்பதியினருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குலத்தின் பெயரை விளங்கவைக்க ஒரு குழந்தை இல்லையே என்று ஸ்டீபன் நிகில ஏக்கமடைந்தார்.

இதனால் கோபம் கொண்ட அவர், அவ்வப்போது தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

ஜாக்குலினுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று கடந்த வருடம் சிகிச்சை பெற்றுள்ளார், ஆனால் ஸ்டீபன், இதற்கான சிகிச்சை பெற மறுத்துள்ளார். இதற்கிடையில், உனக்கு கருத்தரிக்க தகுதியில்லை என கூறி தனது மனைவியை மிக கொடுமையாக அடித்துவந்துள்ளார். இதனால் கணவன் வீட்டை விட்டு தாய்வீட்டுக்கு சென்ற ஜாக்குலின், 3 மாதங்களுக்கு பிறகு கணவனின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தனது மனைவியுடன் கடும் சண்டையில் ஈடுபட்ட கணவன், இது தான் ‘உனது கடைசி நாள்’ எனக்கூறி, அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில், ஜாக்குலினின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மிக மோசமான காயங்களால் அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது. பார்ப்பதற்கே பரிதாப தோற்றத்தில் இருக்கும் ஜாக்குலினுக்கு உள்ளூரை சேர்ந்த மகளிர் அமைப்பினர் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளை புஸ்ஸெல்லா குன்றில் தீ விபத்து…!!
Next post உத்தரப்பிரேதசத்தில் மைனர் பெண்ணை கடத்தி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்…!!