” நீதிபதி சொன்னதாலேயே முகத்தில் குத்தினேன்”…!!

Read Time:2 Minute, 32 Second

boxingசகோதரிகளுடன் சேட்டை விட்டால் முகத்தில் குத்துங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சொன்னதனாலேயே முகத்தில் குத்தினேன் என ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

உடுவில் பகுதியை சேர்ந்த கே.அதிஷ்டராஜா (வயது 45) எனும் நபர் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.

தனது முகத்தில் நபரொருவர் குத்தி காயமேற்படுத்தியதாக சுன்னாகம் பொலிசாரிடம் காயத்திற்குள்ளானவர் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணையினை மேற்கொண்டனர்.

தனது சகோதரிகளுக்கு தாக்குதலுக்கு இலக்கான நபர் நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து வந்தார் எனவும் , சகோதரிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலையே தாக்குங்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறி இருந்ததாக பத்திரிகை செய்திகளில் வாசித்து இருந்தேன்.

அதனாலேயே எனது சகோதரிகளுடன் சேட்டை விட்டவருக்கு முகத்திலேயே தாக்கினேன் என தாக்குதலாளி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தனது வாக்கு மூலத்தை வழங்கினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் முதன்முதலில் குண்டு தாக்குதல்களை நடத்திய ஈரோஸ் இயக்கம்..! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 81) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
Next post யாருக்கு ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆடை கிழிய கிழிய அடிப்பட்ட பெண்கள்..!! வீடியோ