வீச்சு வலையுடன் சென்றவர் யானை தாக்கி பலி..!!

Read Time:3 Minute, 39 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)வீட்டின் வறுமை காரணமாக இரவுவேளை உணவுக்கு கறி சமைப்பதற்கு ஆற்றங்கரைக்கு வீச்சு வலையுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு காட்டு யானை தாக்கி பலியான அவல சம்பம் ஒன்று நேற்றைய தினம் சித்தாண்டி சந்தனமடு ஆற்று பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சித்தாண்டி நாவலர் வீதியில் விசிக்கும் குமாரன் யோகநாதன் (வயது 48) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுக்கு நேற்று (03) பிற்பகல் வேளையில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த யானைக்கூட்டம் குறித்த நபரை மிதித்துவிட்டு சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

குறித்த ஆற்றங்கரையில் மற்றுமொரு மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தவர் நின்ற பக்கத்தில் சத்தம் ஒன்று கேட்டபோது யானைக்கூட்டம் சென்றதாகவும் ஆனால் அங்கு நின்றவரை காணாமல் குறித்த விடயத்தை உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் இன்று (4) காலை வரை ஆற்றங்கரையிலே வைக்கப்பட்ட நிலையில் பொலிஸ் விசாரணை மற்றும் பிரேர பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படயிருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இருந்து ஈரளக்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள பல கிராமங்களில் வாழும் மக்கள் தங்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பல கஸ்டத்தின் மத்தியில் தங்களின் வாழ்க்கையை நடாத்திக் கொண்டுவருகின்ற வேளை இவ்வாறான காட்டு யானைகளினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் மற்றும் துயரச் சம்பவங்களும் அடிக்கடி நடந்தேறிய வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேசத்தில் இருந்து காட்டு யானைகளை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் இதுபோன்று இன்னும் பல உயிர்கள் காவுகொள்ளப்படும் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!
Next post பாடசாலைக்கு மின்சாரம் வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை..!!