பாரிய வாகன விபத்து! ஒருவர் பலி – இருவர் படுகாயம்…!!
கடவத்தை – மாத்தறை அதிவேக பாதையில் உள்ள பியகம நுழைவாயிற்கு அருகில் கெப் ரக வண்டியுடன் கார் ஒன்று நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள மரண வீடு ஒன்றிற்கு சென்று திரும்பி வந்தநிலையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மரண வீட்டிற்கு தாய், தந்தை மற்றும் மகள் சென்று வந்ததாகவும், சம்பவத்தில் தாய்(48) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating