கரடி தாக்கி வயோதிபர் வைத்தியசாலையில்..!!

Read Time:2 Minute, 14 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)திருகோணமலை – மொறவெவ காட்டுப் பிரதேசத்துக்கு தேன் எடுக்கச்சென்ற போது கரடித்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த வயோதிபரொருவர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இத்தாக்குதலில் பன்குளம் 04ஆம் கண்டத்தைச் சேர்ந்த கே.முருகையா (64 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

கரடியின் தாக்குதலால் வயோதிபரின் கால் மற்றும் கண் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொறவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்று, ஒவ்வொருவரும் காட்டுக்குள் பிரிந்து சென்று தேடிக்கொண்டிருந்தபோது விழுந்து கிடந்த முதிரை மரமொன்றில் தேன் கிடந்ததாகவும் அதனை எடுக்க முற்பட்டபோது மரத்துக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த கரடி முகத்தில் பாய்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார்.

பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிய வாகன விபத்து! ஒருவர் பலி – இருவர் படுகாயம்…!!
Next post சூடான் நாட்டில் கனமழைக்கு 76 பேர் உயிரிழப்பு: ஏராளமான வீடுகள் நாசம்..!!