சிறுமி துஸ்பிரயோகம், மூவருக்கு விளக்கமறியல்! – விடுதி சீல் வைப்பு…!!

Read Time:2 Minute, 11 Second

625.590.560.350.160.300.053.800.944.160.90சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக தடைமுத்திரை (சீல்) குற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கிவரும் விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பதிவு செய்யப்படாத விடுதிகள் இயங்கி வருவதாகவும் இந்த விடுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை தீவைத்து கொலை செய்த கணவன்…!!
Next post மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து! இளைஞன் பலி…!!