ரம்ஸ்பெல்டு பதவி விலக ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை
Read Time:1 Minute, 6 Second
ஈராக் கொள்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராணுவ மந்திரி ரம்ஸ்பெல்டு பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மனைவியும், நிïயார்க் செனட்டருமான ஹிலாரி கோரி இருக்கிறார்.
2008-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று நம்பப்படுபவரான ஹிலாரி ராணுவ இலாகாவுக்கான பாராளுமன்ற குழுவில் பேசுகையில் ரம்ஸ்பெல்டு பதவி விலகக்கோரினார்.
நிர்வாகக்கோளாறுகளாலும், அரசுத்தீர்மானத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட திறமையின்மையாலும் ஈராக் கொள்கை தோல்வி அடைந்தது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று ஹிலாரி வலியுறுத்தினார்.