மியான்மரில் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலி…!!
மியான்மர் நாட்டில் பரவிவரும் பரவிவரும் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது.
மியான்மர் நாட்டின் வடமேற்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒருவகையான மர்ம நோய் பரவி வருகிறது. குறிப்பாக, நாகா பகுதியில் வேகமாக பரவிவரும் இந்த மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் 30 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் 5 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் இந்த மர்ம நோய்க்கு இந்தியாவின் நாகலாந்தை ஒட்டியுள்ள நாகா பகுதியில் உள்ள குழந்தைகள் பெருமளவில் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating