ஆயுள் குறைய பிரதான காரணம் மதுபானம்..!!
மதுபான பாவனை ஒரு நபரின் ஆயுள் குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மனநல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற மதுபான கட்டுப்பாடு தொடர்பான தேசிய கொள்கையை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மதுபான பாவனை காரணமாக வறுமை ஏற்படுவதுடன் பெண்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்வது போன்ற விடயங்களுக்கும் இது காரணமாக அமைந்துள்ளது.
அத்துடன், வீதி விபத்து 5 இல் ஒன்று மதுபான பாவனையால் ஏற்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சித்ரலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating