ஜெர்மனியில் பஸ்சை திருடி ஓட்டிய 11 வயது சிறுவன்…!!
ஜெர்மனியில் உள்ள இங்கோல்ஸ்டேட் நகரை சேர்ந்த 11 வயது சிறுவன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பஸ் ரோட்டோரம் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த பஸ்சை ஓட்டிப் பார்க்க அவன் விரும்பினான்.
எனவே யாருக்கும் தெரியாமல் பஸ்சை திருடி தெருவில் ஓட்டிச் சென்றான். வழியில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பயணிகளையும் ஏற்றிச் சென்றான். அவன் தாறுமாறாக பஸ் ஓட்டுவதை பார்த்த பயணிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுவன் பஸ் ஓட்டியதால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் பஸ்சுக்கு ரூ.10 ஆயிரம் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating