ஓடும் பஸ்சில் நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற டிரைவர்…!!
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சந்தோஷ் சாகு என்ற பஸ் டிரைவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தி வந்தார். அதற்கு டிரைவர் தள்ளிப்போட்டு கொண்டே வந்தார். என்றாலும் தொடர்ந்து அந்தப் பெண் வற்புறுத்தி வந்தார்.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பஸ்சில் அழைத்துச் சென்றார். அப்போது திடீர் என்று பஸ் வேறு பாதையில் சென்றது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து டிரைவர் சந்தோஷ் சாகு தனது நண்பரும் கண்டக்டருமான பிபுதி ரவத்துடன் சேர்ந்து காதலியை கொடூரமாக கற்பழித்தார்.
முன்னதாக இருவருடனும் அந்தப் பெண் கடுமையாக போராடினார். அப்போது இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் மயக்கம் அடைந்தார். பின்னர் கற்பழித்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்தார்.
அதன் பிறகு உடலை மகாநதியில் தூக்கி வீசி விட்டனர். இதற்கிடையே இளம் பெண்ணை காணாமல் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடிய போது ஆற்றில் பிணம் மீட்கப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து டிரைவர்-கண்டக்டர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating