பெல்ஜியத்தில் 2 பெண் போலீசாரை கத்தியால் வெட்டிய வாலிபர் சுட்டுக்கொலை…!!

Read Time:2 Minute, 10 Second

201608071356226619_Belgium-Machete-wielding-assailant-killed-after-he-attacks_SECVPFபெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் அருகே சார்லெரோய் நகரம் உள்ளது. நேற்று அங்கு பணியில் போலீஸ்காரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆவேசப்பட்டு தான் வைத்திருந்த வெட்டுக் கத்தியால் பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். அதில் 2 பெண் போலீசார் காயம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவருக்கு முகத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் வெட்டிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

கொல்லப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. மார்ச் 22-ந் தேதி பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதில் 32 பேர் பலியாகினர்.

அதை தொடர்ந்து பெல்ஜியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சார்லெரோயில் பெண் போலீசார் மீது நடந்த தாக்குதலுக்கு பெல்ஜியம் உள்துறை மந்திரி ஜீன் ஜாம்பன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்­தி­ரி நாளை காலிக்கு விஜயம்…!!
Next post மும்பை: ஓடும் ரெயிலில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை…!!