மும்பை: ஓடும் ரெயிலில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை…!!
மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ்காரரான அமர் கெயிட்வாட் என்பவர் போரிவலியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
அந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் இருந்த அவர் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ரெயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த அவரை உடன்வந்த பயணிகள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating