இலவச அம்பியூலன்ஸ் சேவை கொழும்பிலும்…!!
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச அவசர அம்பியூலன்ஸ் வண்டிச் சேவையானது இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கொழும்பிலும் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அம்பியூலன்ஸ் சேவையினை மேல்மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று ராஜகிரியவில் குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சேவையானது தற்போது தென் மாகாணத்தில் இடம்பெற்று வருவதாகவும், இதன் மூலம் 470 பேர் வரையிலும் தற்போது வேலைவாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating