பாகிஸ்தானின் விமான படை தலைவர் இலங்கை விஜயம்…!!
பாகிஸ்தானின் தலைமை விமான பணியாளரும் தலைமை விமான படை தலைவருமான சோஹாலி அமன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மேலும் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சோஹாலி அமன்,இலங்கை விமான படை தளபதி, விமான படை தலைவர் ஜி.பீ புலத்சிங்களவின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது நோக்கில் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating