கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைச் சிற்றுண்டிச்சாலை பூட்டு! நோயாளர்கள் அவதி..!!
கிளிநொச்சி, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய அசொளரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், பெருமளவான நோயாளர்கள், நோயாளர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இன்று காலை முதல் பூட்டப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை ஏ-9 வீதியிலிருந்து 600 மீற்றர் தூரத்திற்கு அப்பால் அமைந்துள்ளது.
எனவே, நோயாளர்கள் தமக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் சிற்றுண்டிச்சாலையிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.
வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை பூட்டப்பட்டமையால் நோயாளர்கள் 600 மீற்றர் தாண்டி ஏ-9 வீதிக்கே வரவேண்டியுள்ளது.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரிடம் வினவிய போது, வைத்தியசாலையில் அமைந்துள்ள, சிற்றுண்டிச்சாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் கீழ் இயங்க வேண்டும்.
எனினும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தற்போது வரை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் கீழ் இல்லை.
சிற்றுண்டிச்சாலையை நோயாளர் நலன்புரிச் சங்கத்தைப் பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்தால் கோரப்பட்டது.
அத்துடன், சிற்றுண்டிச்சாலைக் கேள்வி கோரல், வழங்கலில் சில சிக்கல்கள் காணப்பட்டுள்ளமையால் அதனை முறைப்படி எம்மிடம் கையளிக்குமாறு கோரியுள்ளோம்.
நோயாளர் நலன்புரிச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டால் சிற்றுண்டிச்சலையை உரிய விதிமுறைகளுக்கமைவாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, குறித்த விடயம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நிஷாதி ரணசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating