மர்ம மனிதர்கள் தாக்குதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைக்கிடம்…!!

Read Time:2 Minute, 14 Second

201608081350279770_Mystery-men-firing-RSS-leader-serious-condition-in-punjab_SECVPFபஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கேக்னேஜா. ராணுவத்தில் பிரிகேடியாராக இருந்து ஓய்வு பெற்றவர். பஞ்சாப் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இவர் ஜலந்தரில் காரில் சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் ஜெகதீஷ் உடலில் பாய்ந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக ஜலந்தர் பட்டேல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அங்கு இரவு 11 மணி அளவில் ஆபரே‌ஷன் மூலம் 2 குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டை அகற்ற முடியவில்லை. இதனால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுடப்பட்ட சம்பவத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசப்பற்று மிக்கவர் மீதான தாக்குதல் தீவிரவாதத்தையே காட்டுகிறது. எனவே அதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கில் விளையாடிய 10 வயது சிறுவன் பலி: போலீசார் விசாரணை..!!
Next post நேபாள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் ஹெலிகாப்டர்: 7 பேர் பலியானதாக தகவல்…!!