1875 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது…!!
கொழும்பிலிருந்து பேரூந்தில் கொண்டு வரப்பட்ட புகையிலை தூள்அடைக்கப்பட்ட 1875 என்.சி. டின்களுடன் ஒருவர் பொகவந்தலாவ செல்வகந்ததோட்டத்திற்கு செல்லும் சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட என்.சி டின்கள் 195,000ரூபா பெறுமதி என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்09.08.2016 அன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகபொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating