மராட்டிய மாநிலத்தில் இன்று டாக்டர் தம்பதியர் குத்திக் கொலை…!!
மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் வயதான டாக்டர் தம்பதியர் இன்று கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், ருகாடி கிராமத்தை சேர்ந்த டாக்டர் உத்தவ் தத்தாத்ரேயா குல்கர்னி(70) மற்றும் அவரது மனைவியான பிரட்னயா(72) ஆகியோர் தனியாக கிளினிக் வைத்து சுமார் 50 ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இன்று இந்த கிளினிக்குக்கு சிகிச்சைக்காக வந்த ஷிடல் கோட் என்றப் பெண், இந்த டாக்டர் தம்பதியர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு, ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating