கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து – சொத்துக்களுக்கு பாரிய சேதம்..!!
வெலிமடை – கெப்பெடிபொல டிபோவின் கட்டுப்பாட்டிலுள்ள பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ் மேலும் இரு வியாபார நிலையங்களிலும் மோதி அந்த வியாபார நிலையங்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய பஸ் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating