கென்யா லாட்ஜில் பெண் படுகொலை: சீன சுற்றுலாப் பயணி வெறிச்செயல்…!!
கென்யா தலைநகரான நைரோபியில் லாட்ஜில் தங்கியிருந்த தம்பதியை சீன சுற்றுலாப் பயணி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேஜையை விட்டு எழுந்து செல்லுமாறு கூறினார். அவர்கள் எழுந்து செல்லாததால் அந்த நபர் கத்தியால் தாக்கினான். அதில் மனைவி உயிரிழந்தார், கணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் மாசை மாராவில் உள்ள கீகோராக் லாட்ஜில் நடந்தது. கொலையாளியான சீன சுற்றுலா பயணியை போலீசார் கைது செய்து கஸ்டடியில் வைத்து விசாரித்து வருவதாக அப்பகுதி காவல்துறை தலைமை அதிகாரி கிடியான் கிபுன்ஜா கூறியுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating