அயோத்தியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 7 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!

Read Time:2 Minute, 0 Second

201608091528336771_7-pilgrims-crushed-to-death-in-Ayodhya_SECVPFஉத்தரப்பிரதேசம் மாநிலம், பைசாபாத் மாவட்டம், அயோத்தியா நகரில் நடைபெறும் மழைக்கால திருவிழாவில் பங்கேற்க அருகாமையில் உள்ள கான்பூர் நகரில் இருந்து வந்த பக்தர்கள் நேற்றிரவு சாக்கெட் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் சாலையோரமாக படுத்து உறங்கி கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த சாலை வழியாக வந்த ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தூங்கி கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் மூன்று பெண்கள் உள்பட ஏழு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

காயமடைந்த 12 பேர் அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார், லாரியுடன் தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3டி முறையில் உடலை ஸ்கேன் செய்து பச்சை குத்தும் ரோபோ…!!
Next post கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: கரவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!