பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!!
Read Time:1 Minute, 6 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனையொன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு (09) ஏற்பட்ட இந்த தீ விபத்தினை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது, 7 குழந்தைகளை அவர்கள் காப்பாற்றியுள்ளதுடன் 29 பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம் என தெரிவி்க்கப்பட்டுள்ளது.
ஒழுங்கான பராமரிப்பின்மை மற்றும் மோசமான மின் கம்பியிடல் காரணமாக ஈராக்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
Average Rating