குடும்பத் தகராறு-மனைவி கொடூர கொலை! கணவன் தலைமறைவு ..!!

Read Time:1 Minute, 23 Second

SAM_9923-305x175குடும்பத் தகராறு காரணமாக கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் மாத்தறை பிரதேசப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை திககொட பிரதேசப்பகுதியில் வசிக்கும் சரத் ஜயரத்ன எனும் சந்தேக நபர் அவருடைய மனைவியான வொல்டர் (58) என்பவரை கூரிய ஆயுதம் கொண்டு கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும், இவர் பலதடவைகள் மனைவிக்கு கொலை அச்சுருத்தல் விடுத்து வந்துள்ளார் எனவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் குறித்து தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு..!! (படங்கள்)
Next post ஈரமான துணியை விண்வெளியில் பிழிந்தால் என்ன ஆகும்?… இதுவரை அறிந்திராத விடயம்..!! வீடியோ