குடும்பத் தகராறு-மனைவி கொடூர கொலை! கணவன் தலைமறைவு ..!!
Read Time:1 Minute, 23 Second
குடும்பத் தகராறு காரணமாக கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் மாத்தறை பிரதேசப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை திககொட பிரதேசப்பகுதியில் வசிக்கும் சரத் ஜயரத்ன எனும் சந்தேக நபர் அவருடைய மனைவியான வொல்டர் (58) என்பவரை கூரிய ஆயுதம் கொண்டு கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் எனவும், இவர் பலதடவைகள் மனைவிக்கு கொலை அச்சுருத்தல் விடுத்து வந்துள்ளார் எனவும் கிராமவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலை தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் குறித்து தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating