இளவாலை பகுதியில் கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் பிணையில் விடுவிப்பு..!!
Read Time:1 Minute, 18 Second
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் அண்மையில் உயிருடன் மீட்கப்பட்ட சிசுவின் தாயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தாயிற்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் கோயிலொன்றுக்கு அருகில் இருந்து சிசுவொன்று உயிருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டமை தொடர்பில் சிசுவின் தாய் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிசு தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேகாரோக்கியத்துடன் சிசு காணப்படுவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் நியூஸ் பெஸ்டுக்கு குறிப்பிட்டார்.
Average Rating