வென்னப்புவ பகுதியில் கொள்ளையிட்ட இரு வௌிநாட்டவர்கள்..!!
Read Time:1 Minute, 14 Second
வென்னப்புவ பகுதியில் வௌிநாட்டு நாணயங்களை மாற்றும் மத்திய நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட இரு வௌிநாட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் 10 அமெரிக்க டொலர்கள், 850 சவுதி ரியால் மற்றும் 3000 டிராம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றின் பெறுமதி ஐந்து இலட்சத்து 91,750 ரூபாவுக்கும் அதிமாகும்.
எதுஎவ்வாறு இருப்பினும், இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இதுவரை தெரியவரவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வௌிநாட்டுப் பிரஜைகள் பணத்தைக் கொள்ளையிட்டது அங்குள்ள சிசிடீவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating