இன்று 50 அரச அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு..!!
Read Time:1 Minute, 1 Second
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிக்க அரச நிறுவனங்களின் 50 அதிகாரிகள் இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி செயலகம், சுற்றுலா சபை, சுற்றுலா அமைச்சு, பொறியியல் பணியகம், இலங்கை மின்சார சபை, இலங்கை கால்பந்து சம்மேளனம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளே வாக்குமூலம் அளிக்கவுள்ளனர்.
அத்துடன், சீ.எஸ்.என் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரிகளும் இவ்வாறு இன்று விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Average Rating