சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 21 பேர் பலி..!!
Read Time:57 Second
மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றில் உயர் அழுத்த நீராவி குழாய் இன்று வெடித்தது. இதில் 21 பேர் பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து பிற்பகல் 3:20 மணியளவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தோரில் மூன்று பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating