சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பணியாளர்கள் இருவர் விளக்கமறியலில்..!!
Read Time:1 Minute, 20 Second
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பணியாற்றிய கணக்காளர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் ஆகஸ்ட் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் நீதவான் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய கட்டிட புனர்நிர்மான பணிகளின் போது இடம்பெற்றுள்ள நிதி மோசடி சம்பத்திற்காக குறித்த இருவரும் நேற்று (11) பகல் கொழும்பு விஷேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அதே தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அரச சொத்துக்களி முறைகேடு செய்தல், போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் திட்டமிடுதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating