கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவனை அடித்துக்கொன்ற தாய்..!!
பழனி அருகே உள்ள புஷ்பத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாரிக்கண்ணு (30). இவர்களது குழந்தைகள் தனலெட்சுமி (7), பெரியசாமி (5).
வீட்டு வேலைகளை மட்டும் கவனித்து வந்த மாரிக்கண்ணுக்கு நெய்க்காரப்பட்டி எல்லமநாயக்கன் புதூரைச் சேர்ந்த அங்கமுத்து (32) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
நேற்று மதியம் மாரிக்கண்ணு குழந்தை பெரியசாமிக்கு உடல் நலம் சரியில்லை என்று தங்கை மீனாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்த போது பெரியசாமி இறந்து கிடந்தான். அவனது உடலில் ரத்த காயம் இருந்தது. அது பற்றி விசாரித்த போது மாரிக்கண்ணு முன்ணுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
சந்தேகமடைந்த உறவினர்கள் பழனி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்த போது கள்ளக்காதலில் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மாரிக்கண்ணுவை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நெய்க்காரப்பட்டி எல்லமநாயக்கன் புதூரைச் சேர்ந்த அங்கமுத்து என்பவருடன் எனக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. 2 வருடமாக எங்களுக்கு தொடர்பு உள்ளது. எனது மகள் தனலெட்சுமி எனது தாய் வீட்டில் தங்கியிருக்கிறாள். கணவர் வேலைக்கு வெளியே செல்வதால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
இது போல் நேற்று உல்லாசம் அனுபவிக்க புளியம்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றோம். மகன் பெரியசாமியை ஒரு இடத்தில் விளையாட சொல்லி விட்டு மறைவான பகுதிக்கு சென்றோம். அப்போது அவன் என்னுடன் சேர்ந்து வர அழுது அடம் பிடித்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. உல்லாசத்துக்கு இடையூராக இருந்ததால் இருவரும் சேர்ந்து அடித்தோம். இதில் பெரியசாமி இறந்து விட்டான். அதனை மறைப்பதற்காக சுகமில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடினேன்.
இவ்வாறு மாரிக்கண்ணு கூறினார்.
கள்ளக்காதல் சுகத்துக்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள மாரிக்கண்ணுவின் கள்ளக்காதலன் அங்கமுத்துவை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating