53 வயது பெண் ஒருவர், 73 வயது முதியவர் மீது! செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார்..!!

Read Time:6 Minute, 10 Second

201608130805553813_When-I-was-13-years-old-harassment-40-years-later-53-year_SECVPF13 வயது சிறுமியாக இருந்தபோது தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, 40 ஆண்டுகள் கழித்து 53 வயது பெண் ஒருவர், தனது உறவினரான 73 வயது முதியவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிரடி விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த ருசிகரமான புகாரை கொடுத்துள்ள பெண்ணின் பெயர் பூர்ணிமா கோவிந்தராஜூலு. சென்னை அண்ணாநகரை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கனடா நாட்டில் குடியேறிவிட்டார். கனடா நாட்டில் உயிரியல் துறையில் வவ்வால் ஆராய்ச்சி நிபுணராக வேலை பார்க்கிறார். கனடா நாட்டவரை திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. தற்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுமி பருவத்தில், தனது உறவினர் ஒருவரால் தான் சந்தித்த செக்ஸ் கொடுமைகள் பற்றி இப்போது பெரும் புயலை கிளப்பும் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், டி.ஜி.பி. அலுவலகத்திலும் கொடுத்துள்ளார்.

கனடா நாட்டில் இருந்து, இ-மெயில் மூலம் தனது புகாரை அனுப்பி வைத்திருந்தார். போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் நேரில் அழைத்ததன் பேரில் அவர் தற்போது சென்னை வந்துள்ளார்.

நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி, அவரிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிந்து வெளியில் வந்த பூர்ணிமா, தனது வித்தியாசமான புகார் பற்றி நிருபர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:-

அவசியம் ஏற்பட்ட காரணத்தால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த புகாரை கொடுத்துள்ளேன். அந்த கொடூரம் நடந்தபோது, நான் 10 வயது சிறுமி. நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம். எனது உறவினர் என்னிடம் தினமும் செக்ஸ் தொல்லை கொடுப்பார். 3 ஆண்டுகள் அதாவது 13 வயது வரை என்னிடம் அவர் செக்ஸ் அனுபவித்தார். அப்போது நான் வயதுக்கு வரவில்லை. எனது தந்தை அப்போது சென்னையில் அரசு துறையில் வேலை பார்த்தார். எனக்கு 3 சகோதரர்கள். 86-ம் ஆண்டு நாங்கள் கனடாவுக்கு குடிபோய் விட்டோம்.

நான் பட்ட செக்ஸ் தொல்லை குறித்து எனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் அதை பெரிதுபடுத்தவில்லை. எனக்கு தொல்லை கொடுத்த உறவினர், அதிக அன்பின் காரணமாக என்னிடம் அவ்வாறு நடந்ததாக கூறி தப்பித்துக்கொண்டார்.

அவர் என்னிடம் மட்டும் அவ்வாறு நடக்கவில்லை. என்னைப்போல, பல சிறுமிகளிடம் அவரது செக்ஸ் விளையாட்டை காட்டினார். அப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான சட்டம் இல்லை. ஆனால் இப்போது அப்படி அல்ல. உரிய சட்டம் உள்ளது.

என்னிடம் செக்ஸ் பாசத்தை காட்டிய அந்த பெரிய மனிதர் என்ஜினீயர் ஆவார். தற்போது 73 வயதை தொட்டவர். சென்னை செனாய் நகரில், அவரது மனைவியுடன் தற்போது வாழ்கிறார். அவரது மகனும், மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த வயதிலும் அவர், சிறுமிகளிடம் செக்ஸ் பாசத்தை காட்டி வருகிறார் என்று என்னிடம் பலர் தெரிவித்தனர்.

அவருக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுப்பதற்காகத்தான் இந்த புகாரை கொடுத்துள்ளேன். 40 ஆண்டுகள் கழித்து, கொடுக்கப்பட்ட இந்த புகாருக்கும் சட்டம் உதவி செய்கிறது என்பதை நிரூபிக்க உள்ளேன். நான் கொடுக்கும் வாக்குமூலம்தான், நான் கொடுத்துள்ள புகாருக்கு ஆதாரம். வேறு ஆதாரத்தை இப்போது நான் கொடுக்க முடியாது.

அவருக்கு ஒரு பாடம் கற்பித்து கொடுத்துவிட்டுத்தான், நான் கனடா செல்வேன். எனது புகார் மூலம், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோல அறைக்குள் ரகசியமாக பெரிய மனிதர்கள் நடத்தும் தங்களது செக்ஸ் விளையாட்டுகளை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதும் எனது நோக்கம். இதுபோன்ற தொல்லைகளை அனுபவிக்கும் சிறுமிகள் தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பூர்ணிமா இப்போது கொடுத்துள்ள இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது குறித்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கூட வேன் மோதி 1½ வயது குழந்தை பலி..!!
Next post பணக்கஷ்டம் காரணமாக குழந்தையை விற்ற தாய்..!!