போக்கிமோனால் கறபழிக்கப்பட்டதாக போலீசில் ரஷ்யப் பெண் பரபரப்பு புகார்…!!
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.
இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான ஒருபெண் போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் கற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
நான் தூங்கி கொண்டிருந்தபோது பெரிய உருவம் கொண்ட போக்கிமோன் என்மீது படுத்திருந்தது. நான் துள்ளி குதித்து கட்டிலில் இருந்து இறங்கியதும் அது மறைந்து விட்டது. இருப்பினும், எனது படுக்கை அறைக்குள் போக்கிமோன் கதாபாத்திரங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை எனது கைபேசியின் மூலம் என்னால் பார்க்க முடிகிறது என அந்தப் பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating