காஷ்மீர்: மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட இருவர் பலி…!!
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சுன்ச்சார் கிராமத்தில் நேற்றிரவு ஒரு கடையின்முன் நின்றிருந்தவர்கள்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் மன்சூர் அஹமது உள்ளிட்ட சிலர் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
மன்சூர் அஹமது மற்றும் பரூக் அஹமது டார் ஆகியோர் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த தாக்குதலை நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating