ஆட்டோ மீது முறிந்து விழுந்த தென்னைமரம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம்..!!
திருக்கோவில் – தம்பட்டை பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது நேற்று சனிக்கிழமை (13) மாலை 05.00 மணிக்கு தென்னைமரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில், விநாயகபுரம் 2ம் பிரிவு கற்புகனார் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிவகுமார் வினோஜன் என்பவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சாரதி உட்பட நால்வர் சென்று கொண்டிருந்தபோது திடீரேன பலத்த காற்று வீசியுள்ளது.
இதனால் வீதிக்கு அருகாமையில் இருந்த தென்னை மரம் ஒன்று முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்தது.
இதனையடுத்து, இதில் பயணித்த நால்வரும் படு காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரில் சிகிச்சை இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Average Rating